Thursday, April 23, 2015

முதல் பெண்



ஜெ,

நகுலனுக்கும் சாத்யகிக்கும் நடக்கும் உரையாடல் அழகானது. இவ்வளவு பெரிய ராஜதந்திரப்பேச்சுகளுக்கு நடுவே இப்படி ஒரு சின்ன சுவாரசியமான பேச்சு நடப்பது அழகாக இருக்கிறது. நகுலனைப்போன்ற ஒரு நல்ல இளைஞன் கல்யாணமானதும் நடப்பது இதுதான் பெண்களிடம் பேசுவது என்ன என்றுதெரியாது. எல்லா ஆண்களுக்கும் ஓரளவு இதெல்லாம் தெரிந்திருக்கும். அனுபவம்தான்

ஆண்கள் பெண்களைக் கேலிசெய்வார்கள். அது அன்பான கேலி. அது அவர்கள் ஜாலியாக இருக்கும் மனநிலையைக் காட்டுகிறது. ஆனால் பெண்கள் ஆண்களைப்புரிந்துகொள்ள முயற்சிசெய்துகொண்டே இருக்கும் நேரம் அது. ஆகவே அவர்கள்இவனுக்கு நம் மீது மதிப்பு இருக்கிறதா என்றுதான் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த நிலையில் கேலிதப்பான பொருளை அளிக்கும் பெண்கள் கோபித்துக்கொள்வார்கள்

அதோடு கோபிக்கவும் செய்து இவன் நம்மை சமாதானம் செய்கிறானா என்று பாப்பதும் பெண்களுக்கு ஒரு வழிமுறை. நகுலன் மனைவியான கரேணுமதி பற்றி சொல்லிய இடம் புன்னகையுடன் படிக்கவைத்தது


சாரங்கன்