Tuesday, April 28, 2015

கண்ணீரின் கணங்கள்





அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இன்றைய வெண்முரசு தொண்டையை கனக்கச் செய்து கண்ணீர் வர வைத்து விட்டது. பேருந்தில் இதைப் படித்து முடித்து உதடு துடிக்க ஜன்னல் வழி விரிந்திருந்த பொருளற்ற உலகைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சகோதரர்கள் இப்படியே என்றும் இருந்திருந்தால் இந்தக் காவியமே எழுந்திருக்காதல்லவா?

அன்புடன்,
கணேஷ்



அன்புள்ள ஜெ

இன்றைய பதிப்பு அருமை அருமை அருமை.

வண்ணப்பெருவாயில் – 6


கண்கள் குளமாகிப் போயிற்று.

மனித நேயம் இப்படியே இருந்திருக்கக் கூடாதா என்றே எனக்குத் தோன்றிற்று!!!

எவ்வளவு அழிவுகள் தவிர்க்கப் பட்டிருக்கக் கூடும். க்ருஷ்ணா!!

அன்புடன்
மாலா
 
 
அன்புள்ள ஜெ

ரத்தம் பிரிந்து சண்டையிடவும் துடிக்கிறது. ஒன்றுசேரவும் அதேபோலத் துடிக்கிறது

அதுதான் இன்றைய அத்தியாயத்திலே நான் வாசித்தது. என்ன சொல்ல. emotional

மனோ