Sunday, June 7, 2015

கண்ணன் உடல்



ஜெ

இன்றைய இந்திரநீலம்  ஒரு வித்தியாசமான அனுபவம். சலிக்கச்சலிக்கப் பெண் என்று சொல்லிவிடலாம். நெற்றிமுதல் கால்வரை வர்ணனை மட்டுமே. ஒரு பெண்ணை அல்ல பெண்களை. வகைகளை. படிக்கையில் மொழி கொள்ளும் விளையாட்டுதான் முதலில் நிற்கிறது. அதற்குப்பிறகுதான் காட்சிகள். நீலம் போல ஒரு அத்தியாயம்.

எத்தனை பெண்களை பராக்குபார்த்திருந்தால் இதை எழுதியிருக்கமுடியும் என்றும் நினைத்துக்கொண்டேன்

சண்முகம்


அன்புள்ள சண்முகம்,

உண்மை, பாராக்குபார்த்து எழுதியதுதான். ஓர் அத்தியாயம் முழுக்க பெண்களின் உடல்சித்திரங்கள் என எனக்கே ஆச்சரியமூட்டும்படித்தான் உள்ளது. வாழ்நாளெல்லாம் பெண்களைப் பார்த்தவன். மலர்களைப்போல. அழகென்பது நிகழும் பருவடிவம் என

ஆனால் இது வேறு ஒரு அனுபவம். ஒரு தருணத்தில் பெண் உடலெல்லாம் கிருஷ்ணன் உடலாக தெரிய ஆரம்பிப்பது. என் அனுபவமேதான். அதற்கு உளவியலில் என்னபெயர் என்ன சிகிழ்ச்சை என்று எனக்குத்தெரியும். ஆனால் அது நிகழும்போது அது உண்மையாகவே இருந்தது

ஜெ