Thursday, June 25, 2015

விளிம்பிலுள்ள துவக்கம்

ஆசிரியருக்கு,

கதிர்விளையாடல் – 1,  ஒரு குலக்குடி சபையும் அல்லாத ஒரு அரசபையும் அல்லாத ஒரு இடைப்பட்ட நிலையுள்ள ஒரு வளரும் அரசின் அவை என அங்குள்ளவர்களின் நடத்தையும் பேச்சும்.

சிந்தனை அவ்வளவாக சீரடையாதவர்களுக்கு மொழி துல்லியப்படாது, பொருளும் மிதந்து கொண்டே செல்லும் . இது அந்த அனங்குகளைப் பற்றி பெரும் உரையாடலில் தென்படுகிறது. ஒரு குழந்தையின் சிந்தனையை , ஒரு கனவை, வடித்தெடுப்பது இலக்கியத்தின் சவாலென்றால் இது போன்று அரை நிலையை கொண்டு வருவது இன்னொரு சவால். வெண்முரசு அதை வெற்றி கரமாக சாத்தியப் படுத்தி இருக்கிறது. 

இன்றைய  அந்தகர்கள் ஒரு துவக்கத்தின் விளிம்பில் உள்ளனர்.

கிருஷ்ணன்.