Saturday, June 20, 2015

விலையற்றது

அன்புள்ள ஜெ.

சமீபத்தில் ஒரு இக்கட்டான நிலையைத் தாண்டி வந்தேன்.. 10 நாட்கள் கழித்து மிகவும் சோர்வுடன் இருந்த நிலையில், ஒரு எண்ணம்... வெண்முரசு 10 அத்தியாயங்களை மொத்தமாகப் படிக்கமுடியும் என்பது நினைவுக்கு வந்தது... அத்தனை சோர்வும் பறந்து பழைய இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டேன்... உண்மைதான்.. பயணங்கள் , விளையாட்டு, ஆறு, பூங்கா போன்ற பல பொழுதுபோக்குகளையும் கெடுத்து வைத்திருக்கிறோம் நம் நாட்டில்.. இந்நிலையில் இலக்கியமே விலையில்லாப் பொழுதுபோக்கு.. விலைமதிப்பில்லா பொழுதுபோக்கு...

நன்றி
ரத்தன்