Tuesday, June 30, 2015

ருக்மிணி எங்கே?

முறையாக ருக்மினி தான் ஸ்ரீதேவி என்றும்
பாமா பூதேவியின் வடிவம் என்றும் சொல்வது வழக்கம்.. 

இந்திரநீலத்தில் ஒர் இரு இடங்களில் பாமா திருமகள் என்பதாக குறிப்பிட படுகிறது என்று எண்ணுகிறேன்.

பொதுவாக பூதேவியை பூமி - தேவியாக பார்த்தாலும்,
அனைத்து காணகூடிய செல்வத்தின் அடிவமாக அவள் உள்ளாள் என்றும் சொல்வது உன்டு 
Tangible/ materialistic செல்வத்தின் வடிவே அவள் என்பதாக..

ஆணால் ஸ்ரீதேவி அவைகளுக்கும் மேலான ஒன்றை கொன்டத்னால் ஒரு படி மேல் என்று சொல்வது உன்டு
துலாபாரத்தில் சமமாக துளசியை (ருக்மினி) வைத்த கதை பொன்ற பல எடுத்துக்காட்டு உன்டு. 

பாமா அவனுக்கு எல்லாம் நான் தருவேன் என்ற போது இதை தான் எண்ணினேன்.

இந்த வடிவம் அப்படித்தான் ஒரு வகையில் இந்திரநீலத்தில் இதுவரை உள்ளது.
இந்த குழப்பம் 'திரு'மகள் என்பதனால் எனக்கு வருகிறதோ??

நன்றி
வெ. ராகவ்