Saturday, June 20, 2015

இளமை வண்ணங்கள்



இளமையில் படிந்த வண்ணங்கள் வஞமாக தனிமையாக ஆழ்நினைவுகளாக மானுடரை ஆட்டுவிப்பதைச் சொல்லும் நாவல் என வண்ணக்கடலைச் சொல்லலாம். மெய்ஞானம் தேடிச்செல்லும் இளநாகன் வழியாக விரிவது மகாபாரதத்தை நிகழ்த்திய சில அடிப்படை வஞ்சங்கள் உருவான விதம். அவ்வகையில் மகாபாரதத்தின் வண்ணக்கலவை நிகழ்ந்த செப்பு இது

நற்றிணை வெளியீடாக  வண்ணக்கடல் செம்பதிப்பு, பொதுப்பதிப்பு என இரு நூல்களாக வெளிவந்தது. நற்றிணைப்பதிப்பகத்திற்கும் இதன் மறுபதிப்பை வெளியிடும் கிழக்கு நிறுவனத்திற்கும் குறுகிய காலத்திலேயே மறுபதிப்பு வருமளவுக்கு இதை ஆதரித்த வாசகர்களுக்கும் நன்றி.

வண்ணக்கடலின் இப்பதிப்பை பிழைநோக்கி உதவிய ஜெயஶ்ரீ கோவிந்தராஜன் அவர்களுக்கும் செம்மைசெய்து உதவிய நண்பர் ஹரன் பிரச்ன்னா அவர்களுக்கும் நன்றி

ஜெ