Monday, June 8, 2015

ஓமெனும் மலை

 
 
 
"...ஓங்காரமென குவிந்து விண் தொட்ட மலைமுடிகள்..."

அன்பு ஜெ - இதுவரை இப்படி தோன்றியதே இல்லை, இனிமேல் இப்படி தோன்றாமல் ஒரு மலையை பார்க்க முடியாது !

"கண் சுடர்ந்து இதழ் கனன்று முலைமுனைகொண்டு இடையொசிந்து மதம் சொட்டி காமம் கொள்ளும் பெண்ணில் எழுகிறாள் காலக்கனல் கொண்டு இப்புடவி சமைத்த குலமகள்"

இதில் 'குலமகள்' என்று ஏன் வந்து விழுந்தது  ? காலக்கனல் கொண்டு புடவியையே சமைத்தவள் எந்தக் குலத்தை சேர்ந்தவளாக இருப்பாள் ?!!?
 
 மதுசூதன் சம்பத்
 
அன்புள்ள மது
 
குலமகள் என்பவள் குடும்பப்பெண் என்ற பொருளை அளிக்கிறாள்.பிரபஞ்சமெனும் இல்லத்தின் பெண்
 
ஜெ