Friday, September 4, 2015

இந்திரம்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்திரநீலம் மிக அருமையாக இருந்த்து. 20 நாட்கள் விடுமுறையில் இந்தியா வந்த்தால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. 28ம் தேதி இங்கு வந்தவுடன் தொடர்ந்து வாசித்து இன்று காலைதான் முடித்தேன்.

“மலையுச்சியில்” குறிப்பு வாசித்தேன். நீங்கள் உங்கள் உச்சத்தில் இருக்கிறீர்கள். ஆகையால் இந்த இடைவெளி என்பது சிறு மயக்கமே. புதிய எழுச்சியுடன் வர இறைவன் மற்றும் அனைத்து வாச்கர் வாழ்த்தும் துணை நிற்க்கும்.

செப்டம்பர் 15க்குள் போன மாதம் தொடங்கிய விஷ்ணுபுரத்தை முடிக்க வேண்டும்.

மீண்டும் ஒரு விருந்துக்கு காத்து நிற்கும் அன்பு வாசகன்.

மூர்த்தி