Sunday, September 27, 2015

யோகம்

கந்தர்வனின் கதை ஆகட்டும், திரிசிரசின் கதை ஆகட்டும், இன்று அர்ஜுனன் வென்று மீளும் ஏழு நாகலோகம் ஆகட்டும் அனைத்துமே [குழந்தைக் கதையாக சொல்லப்பட்ட] ஆத்மீகத்தில் ஒரு சாதகன் சிக்கிக் கொள்ளும் இடங்களும், ஒரு சாதகன் வென்று மீளும் இடங்களும் ஆகும்.

குறிப்பாக இன்றைய அத்யாயம்  குண்டலனி, சக்கரங்கள் வழியே உயர்ந்து சகசரத்தை அடையும் ஆத்மீக குறியீட்டின் கதையே.

ஒரு எல்லைக்க்கு மேல் இதை விளக்க இயலாது.  கதைக்குள் ஒரு வரி வருகிறது ''இது வரையாடும் கால் பிழைக்கும் பாதை'' . ஆம் பிழை திரிசிரஸ். வென்ற சாதகன் அர்ஜுனன்.

அர்ஜுனன் செல்வது வெல்லவே இயலாது என்பதை நோக்கிய பயணம்.  ஆத்மீகமும் அதுதான்.  வெண் சுழியின் மைய இருள் புள்ளி  நோக்கி அர்ஜுனன் பறக்கையில் [உண்மையில் பாம்புகளில் சில மரம் விட்டு மரம் தன்னை அம்பாகி பாயும்]  அந்த மையத்திலிருந்து எழும் பெண்ணின் சிரிப்பொலி...

இந்தக் கதையை சொல்லிக் கொண்டிருப்பவள்  ஆணால் தீண்டப்படாத பரிசுத்தமான ஒரு பெண்.

இதற்க்கு மேல் இதை சொல்ல முடியாது என்ற எல்லை வரை சொல்லப்பட்ட கதை.

காண்டவத்தில் ஜெயம் இந்த தத்துவார்த்த சிக்கலில் சிக்கி நின்றுவிட்டார். காண்டீபத்தில் நாண் பூட்டி, அம்பு செலுத்தி, மைய பிந்துவை கச்சிதமாக அடித்துவிட்டார்
 
கடலூர் சீனு