Thursday, September 3, 2015

திருஷ்டதுய்ம்னன்

அன்புள்ள ஜெமோ!

இன்று இந்திர நீலத்தின் முழுமையை வாசித்து முடித்தேன்.
மிகவும் ஆச்சர்யமான ஒன்று என்னவென்றால், முந்தைய பகுதிகளில்
வரும் திருஷ்டத்யும்னனின் சித்தரிப்பு மிகவும் தட்டையானதாக இருந்தது.
நானே கூட ட்விட்டரில் 'வாளேந்திய திருஷ்டத்யும்னன்' என்ற பதம் எத்தனை
 முறை மீளவருகிறது என்பதையும் அதை 'இராஜகுமாரன்' வடிவேலுவிற்கு ஒப்பிட்டு
பகடி செய்திருந்தேன். ஆனால் இந்திர நீலத்தில் திருஷ்டத்யும்னனின் பாத்திரம்
 அதன் வருங்கால செய்கைகள் அனைத்தும் உட்பட கோடிடப்பட்டு செம்மை செய்த
 பொற்சிலை என ஜொலிக்கிறது. துவாரகை எனும் நகரைக்களமாக்கி எட்டு இலக்குமிகளின்
தன்மையும் ஆட்சியையும் அழகாக விளக்கிய நூல் எனும் முறையில் இந்திரநீலம்
 ஒரு முழுமையான படைப்பாய் மிளிர்கிறது. இனி மீண்டும் காண்டவம் தொடரும் என்று நினைக்கிறேன்
(அல்லது கனவு காண்கிறேன்).

அன்புடன்,
ஜெய்கணேஷ்.