Monday, September 28, 2015

வேட்கை

இனிய ஜெயம்,


திரௌபதியின் வேட்கை வழியே, பெண்களின் அக ஆழம் குறித்து மாலினியும் சுபாகையும் பேசும்போது  சுஜயன் தோளில் தூங்கிவிடும் காட்சி அழகு.  குழந்தைக் கதை முடியும் எல்லையில் நதியில் ஒழுகிச் செல்லும் சருகு போல சுஜயன் தூங்கி விடும் சித்திரம் அழகாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. 

கதவு திறக்கும் திரௌபதி அக் கணங்களுக்கு முன்னால் என்ன நிலையில் இருந்தாள் என்பதை இத்தனை துல்லியமாக சொல்லாமல் சொல்லியது  ''சாவடிக்கிறார்'' என்று உள்ளுக்குள் பொங்கியது. [அந்த நிலையை எழுதிப் பார்த்தால் எத்தனை ஆபாசம்? அரங்காவுக்கே வெட்கம் வந்துவிடும்] .

சுஜயனை அடிக்கடி உறங்கவையுங்கள் என்பதை வாசகர் விருப்பமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
 
கடலூர் சீனு