Saturday, September 5, 2015

விழி

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

விழியின் ஆழி படித்தேன். ஏ.வி.மணிகண்டனின் இந்த கடிதம் ஒரு அற்புதம். எத்தனை எத்தனை கடிதங்கள் எல்லாம் ஒரு ஒரு சுவை. ஒரு தரிசனம் என்றால் இது மொத்தமாக உங்களின் இதயத்தை பிரதிபளிக்கின்றது. எதை ஒரு வாசகன் உணர்ந்து சொல்லமுடியவில்லையோ  அதை உணர்ந்தவிதமாகவே சொல்கின்றது. இந்திரநீலம் எழுதிய உங்களுக்கும், இந்த கடிதம் எழுதிய ஏ.வி.மணிகண்டனுக்கும் நன்றி. 

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.