Wednesday, September 23, 2015

சததன்வா கொல்லப்பட்டவிதத்தில் கண்ணன் அறம்மீறினானா?


.
ராஜராஜசோழன் தனது அண்ணன் ஆதித்தகரிகாலனைக் கொன்ற ரவிதாசன் குடும்பத்தை அவனது உறவுப்பந்தலை  தண்டித்தவிதத்தைப்பார்க்கும்போது துரோகிகள் எப்படி தண்டிக்கப்படவேண்டும் என்பதை அறியும்போது அதிர்ச்சி அளிக்கிறது. மானிட அறம் என்பது எல்லாம் அங்கு இல்லை. அரசியல் அறம்மட்டும்தான் இருக்கிறது. ராஜராஜசோழன் அதற்காக ஒன்பது ஆண்டுகள் காத்திருந்தான் என்பதுதான் அற்புதம். 

 சததன்வா யார்? கண்ணன் யார்? சததன்வா பாமாவை திருமணம்செய்துக்கொண்டு யாதவகுலத்தின் தலைவனாக இருக்க நினைக்கிறான். இதில் தவறு இல்லை. அவனுக்கு அந்த நினைப்பு எப்படி ஏற்படுகிறது. கம்சன் அழிந்ததால் ஏற்படுகிறது. சிங்கம் இல்லா காட்டில் நரி நாட்டாமை கேட்டதுபோல் இது உள்ளது.

கம்சனை அழித்தவன் கண்ணன், கம்சன் அழியாமல் இருந்தால் யாதவருக்கு என்று ஒரு அரசு ஏற்பட்டு இருக்குமா? இதை ஜெ இப்படி பாமாவின் வார்த்தையாக அழகாக சொல்கிறார். ஓர் ஆலமரம் உருவாவதேஅரிதென்றால் காடு ஒன்று எழுவது எத்தனை அரிதுஅகந்தையாலோ ச்சத்தாலோ நாம் ஆற்றும் இச்செயலுக்காகஎன்றோ ஒருநாள் நம் மூதன்னையருக்கு நாம் மறுமொழி சொல்லவேண்டியிருக்கும் என நினைவுறுங்கள்.”-இந்திரநீலம்-12..


சததன்வா குறுக்குவழியல் தலைவனாக, மகதத்தின் கைப்பாவையாக ஆக ஆசைப்படுகிறான். அவன் கொள்கை, தலைவன் என்று சொல்வது எல்லாம் அகந்தையால், அல்லது அச்சத்தல். அகந்தையை அச்சத்தை கடந்த கண்ணன் தனிப்பெரும் தலைவனாக இருக்க நினைப்பற்கு இடையூறாக இருக்கும் சததன்வாவை கண்ணன் கொல்லவில்லை. மாறாக சததன்வா பாமாவின் தந்தையை கொன்று சியமந்தகமணியை அபகரித்ததால் பாமா பழிவாங்க முனைகிறாள். அறம்மீறியவனை அறம் தண்டிக்கின்றது என்பதுதான் சததன்வாவின் முடிவு.


கம்சனை கண்ணன் கொன்றான் என்று ஒரு சொல்லில் அதை முடித்துவிடக்கூடாது. கண்ணனின் தந்தையும் தாயும் சிறை இருந்த அந்த தவத்தை நாம் வெறும் வாசகனாய் மட்டும் இருந்துப்பார்க்கக்கூடாது. கம்சன் விசயத்தில் கண்ணனின் பொறுமை அளவுக்கடந்தது. அவனுக்கு கொடுக்கப்பட்ட மரணம்கூட எளிதானது அழகானது. மரியாதையானது. சூதர்களின் புகழ்பாடலுக்கு உரியது. 


சததன்வா அகந்தை, அச்சம், சூது, திருட்டு என்று மானிட அறங்கள் அனைத்தையும் கைவிட்டவன் அவனை வாழவைத்தால் எப்படி இருக்கும்.  மகனை மகளையும் இருபுறமும் நிருத்திக்கொண்டு வீரவாள் வாங்கி ஜனநாயகம் பேசும் தலைவனின் வியபாரதந்திரம்தான் உலகுக்கு கிடைக்கும்.  குற்றவாளி மட்டும் குற்றவாளி அல்ல குற்றவாளிக்கு துணைபோகும் அனைவரும் குற்றவாளிதான்.
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

அறம் இல்லாதவன் அன்பில்லாதவனாகிறான், அன்பு இல்லாதவன் அறம் இல்லாதவன் ஆகிறான் இப்படி ஆவதற்கு காம குரோத மோகம் காரணமாகிறது. இப்படிப்பட்ட சததன்வா ஆட்சியில் நாம் வாழ்ந்தால் நமக்கு என்ன இடம்? பேச்சு சுதந்திரமாவது இருக்குமா? சததன்வாவின் வாரிசுகள் மட்டும்தானே மனிதர்கள் தலைவர்கள் வியபாரிகள் அறிவாளிகள் கவிஞர்கள் கலைஞர்கள் தயாரிப்பாளர்கள் நடிகள் ரசிகர்கள்.  

ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று ஒரு கேள்வி நம்மிடம் உண்டு. ராவணன் ஆண்டது சரியானதாக இருந்தால் அவன் தம்பி ஏன் இராமன் இடம் வருகின்றான். நாட்டை இழந்து காட்டுக்கு போனபோதுகூட ராமன் தம்பிகள் ஏன் ராமனைவிட்டு செல்லவிலை. இதற்கு பின்னாடி பாசம் மட்டும் காரணமாக இல்லை அறம் காரணமாக இருக்கிறது.   

இப்பெண்களை கலங்களுக்கு கொண்டு செல்லுங்கள்இங்கிருந்து நம் கலங்களுக்குள் புகுந்த அக்கணமே இவர்கள்துவாரகையின் குடிகள் ஆகின்றனர்அரசகுடியினர் முறைமையனைத்தையும் தக்கவைத்துக்கொள்கின்றனர்” என்றார். “ஆணை” என்று அவன் தலை வணங்கினான். “அவர்களில் துவாரகைக்கு வரவிழையாதவர்களை அவர்களின்குடிமூதாதையரின் ஊர்களுக்கு அனுப்புங்கள். படகில் ஏறியதுமே அதற்கேற்ப தனித்தனியாக பிரித்துவிடுங்கள்.”-ந்திரநீலம்-42-இந்த வரியில் கண்ணன் உள்ளத்தையும் அறத்தையும் உணரமுடியும். துவாரகைக்கு வரவிரும்பாதவர்களை குடிமூதாதையரின் ஊருக்கு அனுப்புங்கள் என்று சொல்லும் இடத்தில்  ராஜராஜசோழன் வெறும் அரசன் மட்டும் என்று காட்டிப்போகிறான் கண்ணன். இங்கு கண்ணன் அறத்தாயாக தெரியவி்ல்லையா? அந்த தாய்மைதான் தெய்வமாகவும் வந்து நிற்கிறது வெண்முரசில்.


சததன்வா கொல்லப்பட்டு அவன் நாடு அழிக்கப்பட்டு அக்ரூரர் மற்றும் கிருதவர்மா குலமன்றில் குற்றவாளிகளாக நிறுத்தப்படும்போது மனோகரர் சொல்லும் சொல் கவனிக்கப்படவேண்டியது.

அரச ஆணையை புறக்கணித்து எதிரியுடன் இணைந்துகொண்டதை இரண்டகம் என்று இந்த அரசவை வகுக்கிறது.வதைக்கொலை அதற்கான தண்டனைஇறப்புக்குப்பின் மண்ணில் சூதர்களின் வசை நீளவேண்டும்.விண்ணேகச்செய்யும் நீர்ச்சடங்குகள் செய்யப்படலாகாதுதீரா இருள்நரகு அமையவேண்டும்சௌமுத்ரா நீதி அதைவகுத்துரைக்கிறது” என்றார்.-இந்திநீலம்-45

சௌமுத்ராநீதி எதிரியுடன் இணைபவனுக்கே இத்தனை வன்வம் காட்டும் என்றால் எதிரியின்மீது எத்தனை வன்மம் கொண்டது. சததன்வாவை  எந்ததிசையில் திருப்பிப்பார்த்தாலும் அறம்மீறியவன்தான்.

சொந்த தொலைக்காட்சி அமைத்து தனக்குதானே பட்டம் கொடுத்கொண்டு தன்புகழ்பாடுவதெல்லாம் நாங்கள் அறம் மாறதவர்கள் என்பதைக்காட்டத்தானே. அவர்கள் புகழை காலம் வரலாற்றில் அறத்தோடு  வைக்கவேண்டும் என்பதற்காகத்தானே. 

அறம்மீறுபவன் உலகத்தின் விதையில்லை. புதைக்கப்பட்ட வெடிகள். அவைகளை கண்டு பிடித்து அழிக்கபப்படுவதே அறம். வெண்முரசு கண்ணனை முன்னிருத்தி அதைதான் சொல்கிறது.

விதையை புதைத்து அதன்மீது உட்கார்ந்தாலுதம் அது முளைத்து எழுந்து நிழலும் கனியும் தரும். அறம் என்பது விதை. அறத்தை வளர்ப்பதில் கண்ணன் ஒரு விவசாயி. விதை வளர்வதற்கு களை எடுக்கிறான். களைக்கு அவன் தீ. பயிருக்கு அவன் ரவி.  

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.