Wednesday, September 2, 2015

அடுத்த நாவல்

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,


தங்களது இந்திர நீலம், மிகவும் அருமை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தினமும் வாசித்தது வந்தேன். தங்களது கற்பனை வளம், என்னையும் தினமும் கிருஷ்ணனுடைய லீலைகளில் ஈடு பட வைத்து, ஓரு பட காட்சி போல் நானும் அதை அனுபவித்து வந்தேன். தினமும், துவாரகையிலும், யமுனையிலும் நானும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் வாழ்ந்திருக்கிறேன். மிகவும் அற்புதமான அனுபவம்.


அடுத்த நாவலுக்கு 15ம் தேதியை நோக்கி காத்திருக்கிறேன்.
நன்றி


ஸ்ரீராம்
தாம்பரம்-சென்னை

அன்புள்ள ஸ்ரீராம்


நன்றி

அடுத்தநாவல் இன்னும் தொடங்கவில்லை. தொடங்குவதற்கு முந்தைய பதற்றம் சோர்வு அச்சம்...


ஜெ