Tuesday, December 8, 2020

சொல்வளர்காடு


 


அன்புள்ள ஜெமோ


இரண்டு வருடங்களாக எனது காலை பொழுது காப்பியுடனும், உங்கள் வெண்முரசுடனுவே தொடங்குகின்றது. ஒரு பகுதி முடிந்து அடுத்து தொடங்கும்  இடைப்பட்ட நாட்களில் மறுபடியும் பழைய வெண்முரசின் பக்கங்களையே படிக்கின்றேன்.

சொல்வளர்காடு படித்தாலும், சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கான உளநிலை இப்போது இல்லை என்றே சொல்ல வேண்டும். வெய்யோன் படித்து விட்டு, மனம் பேதலித்து அலைந்த நாட்கள் உண்டு.

ஆனால், என்றும் படிப்பது நீலமும், இந்திரநீலமுமே. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை, தடுமாற்றங்களை நீலத்தைப் பற்றி கொண்டே கடக்கின்றேன். சமீபத்தில் கடுமையான உளசிக்கல் ஏற்பட்ட போது, நீலம் படித்தும் கலக்கம் தீரவில்லை. இந்திரநீலம் படித்க தொடங்கிய போது, எங்கேயோ திருஷ்டத்யுமனாக என்னை உருவகித்து கொண்டேன். இந்திரநீலம் படித்து முடிக்கும் போது அவனது மனநிலையிலே நான் இருந்தேன். நீலனான அவனிருக்கிறான் என்னுடன் என்ற தெளிவுடன், அவனையன்றி யாருமில்லை என்ற உண்மையையும் உணர்ந்தேன்.

இப்படிபட்ட ஒரு படைப்பை தந்த உங்களை பாராட்ட எனக்கு தகுதியில்லை, என்பதால் வணங்குகிறேன்.

நன்றி
ராதா