Monday, December 7, 2020

தோல்வி


 அன்புள்ள ஜெயமோகன்,


சில பல நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் வெண்முரசைப் படித்தேன். "கர்ணனிடம் அனைத்து சிறப்புகளுடன் இணைந்து தோல்வி நோக்கிச் செல்லும் சரிவொன்று இருந்தது." என்ற வரிக்கு அப்புறம் படிக்கவே முடியவில்லை. ஒரு வாசகம் என்றால் திருவாசகம் என்பது இன்று தேய்வழக்காக மாறிவிட்டது, ஆனால் இது உண்மையிலேயே திருவாசகம் ஐயா!

வாழ்க்கை கடந்த சில வருஷங்களில் எப்படி எப்படியோ சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் கழுத்து வரை இருக்கும் தண்ணீரில் முழுதாக முழுகாமல் இருக்கச் செய்யும் முயற்சிகள் மட்டுமே. மீள்கிறேன் என்று நினைத்துக் கொள்ளும்போதெல்லாம் மீண்டும் முழம் சறுக்கிவிடுகிறது. என்னிடமும் தோல்வி நோக்கிச் செல்லும் சரிவு இருக்கிறதோ என்று தோன்றுகிறது...

மீண்டும் படிக்க ஆரம்பிக்க வேண்டும்...

அருண்மொழிக்கு என் அன்பு...

அன்புடன்
ஆர்வி