Wednesday, December 9, 2020

வெண்முரசு வாசிப்பு

 


பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.ஜெயமோகன் ஸார் அவர்களுக்கு சென்னையிருந்து கணேசலிங்கம் அன்புடன் எழுதுகிறேன்.

தங்களது மகாபாரதக் காவியமான...வெண்முரசின் ஜந்தாம் பாகம் "பிரயாகை" புத்தகத்தை பல நாட்களாக ரசித்துச் சுவைத்துப் படித்து...இன்று மாலை தான் முடித்தேன்.ஏற்கனவே தங்களின் அற்புதமான எழுத்து நடையில் படித்த நான்கு பகுதிகளைப் போலவே...பிரயாகையும் பிரமாண்டமாகவே இருந்ததென்பதை..பாராட்டுகளுடன் தெரியப்படுத்துவது கடமை என்றே கருதுகிறேன்.

மகாபாரதக் கதையை...சிறுவயதிலிருந்தே அப்பா வாயிலாக, திரு.இராஜாஜி அவர்களின் வியாசவிருந்து...புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவுகள், மற்றும் அனேக டிவி சீரியல்களிலும் கேட்டு, பார்த்து ரசித்து இருந்தாலும்....தங்களுடைய எழுத்துநடையும், கதாபாத்திரங்களையும், நிகழ்வுகளையும் விவரிக்கும் விதமும்..மாபெரும் இதிகாச காவியத்தை அந்தக்கால கட்டத்தில் வாழ்ந்த மக்களோடு இணைந்து நேரில் கண்டு களித்த பேருவகை நெஞ்சில் எழுகிறது.

 

எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீவினாயகப் பெருமான், மகா ஸ்ரீசரஸ்வதி தேவி,ஸ்ரீவேத வியாசர் அனைத்து தெய்வங்களின் நல்லாசிகளையும் தாங்கள் அருளப் பெருவீர்களாக!!

 

அனேக வணக்கங்களுடன்

தங்கள் அன்பு வாசகன்

 

செ.கணேசலிங்கம்