Friday, September 1, 2017

பித்ருக்களுக்கும்-மூதாதையர்களுக்கும் வழங்கும் இடம்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம். 

உங்களின் எழுத்துக்களில் தாய்,தந்தை மற்றும் மக்களுக்கிடையே உள்ள உறவும்,பாசமும்,மதிப்பும்  வெளிப்படும் விதம் எப்போதுமே அனாயாசமாகவே இருக்கிறது.அது "தேர்வு" போன்ற தங்கள் கட்டுரையானாலும் சரி  ,"வெண்முரசு" போன்ற காவியமானாலும் சரி ஒன்றை ஓன்று விஞ்சும் விதத்திலேயே உள்ளது.நீங்கள் வெண்முரசு முழுவதிலும் பித்ருக்களுக்கும்-மூதாதையர்களுக்கும் - வழங்கும் இடம் படித்து படித்து போற்றத்தக்கதாகவே உள்ளது.நீர்க்கோலத்தின் இறுதிப்பகுதியில் வரும் சுதீரன்,அவர் தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடல், நளன்,தமயந்தி அவர் தம் மக்கள் இடையே நடக்கும் உரையாடல் இதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு!.
 
 தந்தையே, எதன்பொருட்டு ஒருவன் தந்தையின் ஆணையை மீறலாம்?” என்றான். அவர்எதன்பொருட்டும் அல்லஎன்றார்.
அவன் நெஞ்சு திடுக்கிட்டு பின் ஓசையுடன் உருண்டு சென்றது. மூச்சைத் திரட்டிஅதனால் பழி சேர்ந்தால்?” என்றான். “அது ஊழ். அப்பழியை தானே முழுதேற்றுக்கொள்ளவேண்டும். துறந்து கானேகி தவம்செய்து அதை வெல்லவேண்டும். அல்லது பிறந்து பிறந்து கரைக்கவேண்டும் 
தந்தை என்ன செய்தார் என்று உசாவுதல் மைந்தனின் பணி அல்ல. தன் செவிமுன் தந்தையைப் பழிப்பதை கேட்டிருப்பது அவன் நெறியும் அல்ல. அவர் அடைந்ததில் எஞ்சுவதை மட்டும் முன்னோர்கொடையெனக் கொள்வதே மைந்தரின் வழி. செல்வமும் புகழும் அறிவும் அவ்வாறே வந்தடையவேண்டும். கடனும் பழியும் இழிவும்கூட தந்தைக்கொடையென்றால் தலைவணங்கி ஏற்றாகவேண்டும்.”
பாகுகன் விம்மியழுதபடி இரு கைகளையும் விரித்தான். “தன் இடம் ஏதென்று தேடியவன் இப்போது கண்டடைந்தான்தந்தையரின் நீங்கா உறைவிடம் மைந்தர் நெஞ்சமேஎன்றான். நெஞ்சு வெடித்தெழுந்த குரலில்என் குழந்தைகளே, பாகுகனாகிய நானே நளன். 
அன்புடன்,
அ .சேஷகிரி.