Thursday, October 31, 2019

கழுநீர்க் கரை – 11



அன்புள்ள ஜெ

உறைந்து போய் விட்டேன் இந்த இதழை படித்த பிறகு।

கண்ணில் நீர் வடிந்து கொண்டே இருந்தது।

அங்கிருந்த அனைவருக்குமே துக்கம் தான்। சோகம் தான்।

என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை।

புத்திர சோகமே அனைவருக்கும்।

கண்ணிழந்தவரை பற்றி என்ன சொல்ல?

நீங்கள் அவரின் உணர்வுகளை எழுதி இருந்தது அப்படியே உள்ளத்தை  தைத்து விட்டது।

ஆனாலும் அந்த அம்மையின் வாழ்த்துக்கள் என்னை ஒரு உத்தமி எப்படி இருந்திருப்பாள் என்று உணர்த்தியது।

எப்பேர்ப்பட்ட பெரியவள் அந்த அம்மை। தலை வணங்குகிறேன்।

அன்பே உலகில் உலகை காட்டிலும் பெரியது।

உணர்ச்சி வெள்ளமாகியது இன்று காலை।

எப்போதும் போல் அந்த கண்ணன் உங்களோடு எப்போதும் இருக்கட்டும்।

அன்புடன்
மாலா