Monday, October 28, 2019

ஊழ்



அன்பின் ஜெ,

இன்றைய அலுவல இடைவேளையில் குருதிசாரல் செம்பதிப்பை  பிரித்து கண்ணில் தென்பட்ட பக்கத்தை படிக்க ஆரம்பித்தேன்.

"சஞ்சயா, பீமனிடம் சொல், என் மைந்தரைக் கொல்லலாகாதென்று. என் மைந்தர் களம்பட்டுக் கிடப்பதைக் காணும் தீப்பேறை எனக்கு அளிக்கலாகாதென்று".

இதோ, இன்றைய (நீர்ச்சுடர்- 24) அத்தியாயத்தில் துரியனின் சிதை சாம்பல் மேல் விழுந்து உழன்றுகொண்டிருக்கிறார்.

ஊழின்பால் முன்னரே வகுக்கப்பட்ட தருணங்கள்.

-யோகேஸ்வரன் ராமநாதன்.