Thursday, April 9, 2015

ஒன்றேகால் வருடம்



அன்புள்ள ஜெயமோகன்

கிட்டத்தட்ட 1.4 வருடங்கள் ஓடி விட்டது இந்த பயணம்ஒரு புறம் மூளையின் செல்களின் அளவுகளை முழுதும்திணற அடிப்பதாகஇடம் இல்லை என்று தோணும் படியாக  ஒவ்வொரு பகுதியின் பாத்திரங்கள்வர்ணனையின்நுணுக்கங்கள்விரியும் உலகுகள்பிணையும் ஊழின் விளையாட்டுகள்தகவல்கள் , ஒவ்வொரு பாத்திரங்களின்மாற்றங்கள்அக பரிமாணங்கள்வளரும் ஆளுமைகள் மற்றொரு புறம் விவாத தளங்களில் வரும் கடிதங்களில்தெரியும் புதிய பார்வை மற்றும் கோணங்கள் .... 

விட்டு தள்ளி போய் விட்டது எனும் படியாக ஒரு ஏக்கம் பரவுகிறது இந்த வெண்முரசு எனும் பெரிய கலம்.இறக்கும் போது நினைத்து பார்த்து நிறைந்து மலர்ந்து சிரித்து சாகும் படியாக ஒரு எழுத்து தவ வாழ்வை உங்களின் மேல் இறக்கி வைத்து சென்ற உங்களின் அம்மையை நினைத்து கொண்டேன். வாழ்த்துக்கள் மீண்டும் 

அன்புடன் 
லிங்கராஜ்