Wednesday, April 1, 2015

பெற்றோர் அறிந்தது







ஜெமோ,

இந்த வெண்முகில்நகரம் அத்தியாயங்களில் மிகவும் நுட்பமான ஒரு விஷயம் உண்டு. துரியனுக்கு பாஞ்சாலி மேல் இருக்கும் ஈர்ப்பும் உண்மையில் போர் நடந்தது அவனுக்காகத்தான் என்பதும் மிக அந்தரங்கமான விசயங்கள். ஆனால் காந்தாரிக்கும் திருதாவுக்கும் அவை மிக நன்றாகத் தெரிந்திருக்கின்றன. அவர்கள் பேசிக்கொண்டிருந்திருக்கலாம் என்று பார்த்தாலும்கூட அப்படி இருவரும் தனித்தனியாக அறிந்திருக்கலாம் என்பதுதான் சிறப்பாக இருக்கிறது

இதைப்நாம் வாழ்க்கையிலும் பார்க்கலாம். தங்கள் பிள்ளைகளின் மிகவும் அந்தரங்கமான செக்ஸ் ரசனைகூட அம்மாக்களுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. இது எப்படி என்று யோசித்தால் அந்த அம்சம் அந்தப்பெற்றோருக்கும் கொஞ்சம் இருக்கும் என்ற பதிலை மட்டும்தான் சொல்லமுடிகிறது

கிருஷ்ணன் அதைக்கேட்கும்போது கொஞ்சம்கூட ஆச்சரியப்படவில்லை. அவன் பாட்டுக்குத்தெரிந்துகொண்டு மேலே பேசிக்கொண்டே போகிறான். அந்த இடம்தான் மிகச்சிறப்பாக இருந்தது.

மனோ