Saturday, September 7, 2019

பீஷ்மரின் உள்ளம்2




அன்புள்ள ஜெ

பீஷ்மரின் ஆளுமை பற்றிய கடிதமொன்றை வாசித்தேன்

அந்தக் கடைசிக்காட்சியில் பீஷ்மர் பீமனை மட்டுமே முழுமனசுடன் ஏற்கிறார். அவருக்கு அதிர்ச்சியே இல்லை. அவன் குலாந்தகன் என அறிந்திருக்கிறார் என்று தோன்றியது. அவனை அவர் வாழ்த்துகிறார். மற்றவர்களைச் சலிப்புடன் பார்க்கிறார்

இதேகாட்சி வந்திருக்கிறதா என்று பார்த்தேன். அல்லது இதற்கான க்ளூ. வெண்முரசில் எல்லா காட்சிகளுக்கும் முன்னர் தெளிவான க்ளூ இருக்கிறது. பெரிய தொடர்ச்சி இருக்கிறது

கடைசியில் கண்டுபிடித்தேன். பீஷ்மர் காட்டிலிருந்து திரும்பும்போது இளைஞர்களாகிய பாண்டவர்களையும் கௌரவர்களையும் பார்க்கிறார். அவர் சலிப்புற்றிருக்கிரார். அவர்களை ஒப்புக்கு வாழ்த்துகிறார். ஆர்வமே இல்லை

ஆனால் பீமனை மட்டும் மனம் உவந்து வாழ்த்துகிறார். அவன் மடியில் ஒரு பாம்பை வைத்து கட்டியிருக்கிறான். அது கீழே விழுந்து செல்வதைக் கண்டு புன்னகைபுரிகிறார். அங்கேயே அவருடைய மனம் தெரிந்துவிடுகிறது

சரவணன் கார்த்திகேயன்