Friday, September 6, 2019

எச்சம்



அன்புள்ள ஜெ

பீஷ்மர் சொல்லும் இந்த வரிகளை இணையத்திலிருந்துதான் நானே கண்டுபிடித்தேன். இத்தனைக்கும் வெண்முரசை நான் ஒவ்வொருநாளும் இரண்டுமுறை வாசித்துவிடுவேன்

மண்ணையும் பெண்ணையும் அளிப்பதென்றால் எச்சமின்றி அளிக்கவேண்டும். உன்னில் ஒரு துளி விழைவோ ஏக்கமோ எஞ்சலாகாது. அளித்தேன் என்னும் எண்ணமும் மிஞ்சியிருக்கலாகாது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அது உருவாகவும்கூடாது. அது எளிதல்ல. ஷத்ரியர்களுக்கு இயல்வதே அல்ல!

பீஷ்மரின் வாழ்க்கை அந்த முள்படுக்கையில் ஏன் முடிகிறது என்பதற்கான காரணம் இந்த வரிகளில் இருக்கிறது.

சந்திரகுமார்