Saturday, September 7, 2019

ராதையும் கர்ணனும்



ஜெ

வெண்முரசில் உச்சகட்ட காட்சிகள் பல உள்ளன. ஆனால் மிகநுட்பமான சிலகாட்சிகளால்தான் நான் அதை புரிந்துகொள்கிறேன். அதிலொன்று கர்ணனுக்கும் ராதைக்குமான உறவு முறியும் இடம். கர்ணன் ராதையையே அன்னை என நினைக்கிறான். ஆனால் அவள் முதன்மையாக அன்னை அல்ல மனைவிதான். சூதப்பெண்தான். தன்னை அவள் உள்ளூர மகனாக ஏற்கவில்லை. ஆகவே தான் சூதப்பெண்ணை மணக்கவேண்டும் என்கிறாள். அது தெரிந்ததும் அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்துவிடுகிறது. அதன்பின் அவளை அவனால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை

ஆனால் அவன் அதை அவளிடம் காட்டவே இல்லை. உல்லாசமாகப்பேசுகிறான். வாழைப்பூக்கூட்டை பற்றி நகைச்சுவை சொல்கிறான். அவளிடம் முன்பெனவே கொண்டாடி கொஞ்சிவிட்டு விடைபெறுகிறான். ஒவ்வொருவராக அவனைக் கைவிடுகிறார்கள். முதலில் அதிரதர். அதன்பின் ராதை. காதலி ஆசிரியர் அரசு என எல்லாரும் கைவிடுகிறார்கள். முதலில் கைவிடுபவள் அன்னை

ஆனால் எந்தநிலையிலும் அவன் பெரிய உள்ளத்துடன் தான் இருக்கிரான்,.ராதை தன் கள்ளமில்லாத தன்மையால் அவனைக் கைவிடுகிறாள். ஆனால் அவன் அதை அவளிடம் காட்டிக்கொள்ளவே இல்லை. கர்ணனின் குணச்சித்திரம் ஓங்கி நின்றிருக்கும் இடம் அது. அந்த இடத்தை இந்த இடைவெளியில் மீண்டும் சென்று வாசித்தேன்

ராஜ்குமார்