Sunday, September 8, 2019

பகடி




ஜெ

ராதையும் கர்ணனும் விலகும் இடத்தைப்பற்றி ஒரு வாசகர் எழுதியிருந்தார். அந்த அத்தியாயத்தில் ஒரு வரி எனக்குப் பிடித்திருந்தது. அதைக்குறித்து வைத்திருந்தேன்

“தத்துவத்தை குதிரைகள் இளவயதில் விரும்புவதில்லை. ஆகவேதான் நாம் அவற்றுக்குக் கடிவாளம் போட்டுவிடுகிறோம்” 

பொதுவாக வெண்முரசில் வெடித்துச்சிரிக்கவைக்கும் இடங்கள் இல்லை. ஏனென்றால் அவை இந்த அமைப்புக்குள் அமையாது. ஆனால் இத்தகைய நுண்பகடிகள் பல உண்டு. இந்தவரியை ஒரு சாதாரண வாசகர் இதில் என்ன நகைச்சுவை இருக்கிறது என்றுதான் நினைப்பார். ஆனால் கடிவாளம்போட்டபின் குதிரைகள் தத்துவத்தை விரும்புகின்றன என்று மாற்றிக்கொள்ளும்போது ஒரு வருத்தமான புன்னகை வருகிறது. அதுதான் வெண்முரசின் வேடிக்கையான வரிகளின் இயல்பு

அதோடு தத்துவமாகப் பொழியும் அதிரதன்மீதான பகடியும்கூட இது

பாஸ்கர்