Thursday, September 5, 2019

விலை



ஜெ

வெண்முரசில் வரும் இந்த வரியை மிகவும் ஆழ்ந்து வாசித்தேன். ஒரு ஒழுக்கில் இந்த வரி வந்துசெல்கிறது. தனியாக வாடித்தால்தான் அர்த்தமே தெரிகிறது

செல்வம் கொண்டவன் தனிமையை அடைவான். குடிப்பிறப்பு கொண்டவன் இணையான எதிரியை அடைவான். வீரம் ஆணவத்தை அளிக்கும். சூழ்ச்சி ஐயத்தையும், அச்சம் சினத்தையும், காமம் சலிப்பையும் அளிக்கும். வஞ்சம் துயிலின்மையை. அதைத் தெரிவுசெய்தபின் நீ ஒருகணமும் உளமுறங்க இயலாது!

ஒவ்வொன்றுக்கும் ஒருவிலை உண்டு. இங்கே அந்த விலை என்ன என்பதைச் சொல்கிறது வெண்முரசு. அஸ்வத்தாமன் அந்த விலையைத்தான் இனிமேல் வாழ்க்கை முழுக்க அளிக்கப்போகிறான் இல்லையா?

சிவக்குமார்