Wednesday, September 4, 2019

பலியாடு



அன்புள்ள ஜெ

துரோணரை திருஷ்டதுய்ம்னன் கொன்றதைப்பற்றிய கடிதம் வாசித்தேன். ஒருவகையில் திருஷ்டதுய்ம்னன் ஒரு பலியாடு. அவன் ஒரே காரணத்துக்காக வளர்க்கப்படுகிறான். அவனால் நியாய அனியாயங்களைப் பார்க்கவே முடியாது.அவன் பிறந்து வந்ததே ஒரே காரணத்துக்காகத்தான். அதைச் செய்கிறான். அவன் வாழ்க்கை முழுக்கக் காத்திருந்த நிகழ்வு. ஆகவே கொண்டாடுகிரான். ஆகவேதான் அவ்வளவு கொடூரமாக கொல்லப்படுகிறான்

அவனை நினைத்துப் பரிதாபம்தான் படவேண்டும். மகாபாரதத்தில் பல கதாபாத்திரங்கள் வெறும் பலியாடுகள்தான். விதியால் ஆட்டுவிக்கப்படுகிறவர்கள். அவர்களே எதையும் சொந்தமாகச் செய்துவிடமுடியாது. அவர்களின் நிலை ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட ஸ்கிரிப்டில் நடிப்பது மட்டும்தான்

செந்தில்குமார்