Saturday, September 7, 2019

வாசகர்




அன்புள்ள ஜெ

முதற்கனல் முதல் வெண்முரசை வாசிப்பவர்கள் எத்தனைபேர் என்ற ஆச்சரியம் எனக்கு உண்டு. நான் சிலகாலம் முன்பு ஒருமுறை ரயிலில் பயணம்செய்யும்போது ஒரு நண்பரைப் பார்த்தேன். விஸ்வநாதன் என்று பெயர். உங்க்ள் வாசகர் அல்ல. வெண்முரசு மட்டுமே வாசிக்கிறார். மெடிக்கல்துறையில் இருக்கிறார். அவரைக் கண்டது ஆச்சரியமாக இருந்தது. இன்னொருவர் வாசிக்கிறர் என்பது அல்ல, அவாறு ஒருவரை சந்திக்கமுடிவதே அவ்வாறு பலர் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்பதனால்தான்

நேற்று மீண்டும் ரயிலில் இன்னொருவரைக் கண்டேன். நம்பவே முடியாத இடத்தில். ஷிர்டியில். அவரும் வெண்முரசைமுழுக்கவே வாசிப்பதாகச் சொன்னார். நிறையப் பேசிக்கொண்டோ. ஸ்ரீரங்கன் என்று அவருடைய பெயர். ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் பேசப்பேச வெண்முரசின் பல அறியாநுட்பங்கள் எழுந்தெழுந்து வந்தன

வாழ்த்துக்கள்

ஆர். ஸ்ரீனிவாஸ்