Wednesday, September 4, 2019

குமிழி


அன்புள்ள ஜெ

நலம்தானே?

தீயின் எடை முடிந்தபின் எழுதவேண்டும் என்று நினைத்தேன். கிட்டத்தட்ட வெண்முரசு நாவலே முடிந்ததுபோலத்தான் இனி பெரிய ஒரு வைண்டிங் அப் மட்டும்தானே?

துரியோதனன் சாவு முன்னரே மனசில் நிகழ்ந்துவிட்டது. ஆனால் நகர்மேல் விழும் அழிவை எப்படி எண்ணுவதென்று தெரியவில்லை. ஹிரோஷிமா நாகசாகி மேல் அணுகுண்டு விழுந்தபோது இப்படி இருந்திருக்கும், நஞ்சும் மண்ணும் தீயும் ரத்தமும் மழையாகப்பொழிந்து அதை மூடியிருக்கும் என நினைக்கிறேன். அந்த பயங்கரமான அழிவு. அதை பலவகையில் சொல்லியிருக்கிறீர்கள். மூழ்கி அப்படியே மறைவதுபோல தோன்றியது. குமிழிகள் வெடித்து நுரை அழிவதுபோலத் தோன்றியது என்று சொல்லப்படுகிறது

சரித்திரத்தில் அப்படி பல நகரங்கள் இல்லாமலாகியிருக்கின்றன. எதுவுமே செய்ய முடியாது. ஏனென்றால் அது வரலறு. எல்லா நகரங்களும் வரலாற்றுப்பெருக்கில் சிறிய நுரைக்குமிழிகள் மட்டும்தானே?

ஆனந்த்