Friday, September 6, 2019

பொறி



அன்புள்ள ஜெ

அபிமன்யூவின் சக்ரவியூகப்போர் பற்றிய பகுதிகளை இப்போதுதான் வாசித்தேன். அந்த போர்ச்சூழ்கையை ஆச்சரியமாகத்தான் பார்த்தேன். அதற்கு இவ்வளவு குறியீட்டு அர்த்த இருக்குமென நினைக்கவே இல்லை. தாமரையாகவும் சக்கரமாகவும் மாறி மாறி அதை வர்ணிக்கிரீர்கள். மனிதர்கள் அனைவருமே சிக்கிக்கொண்டிருக்கும் சக்கரவியூகம் அது என்று நினைக்கையில் ஆச்சரியம்தான் ஏற்படுகிறது

அவன் பிறப்பு முதல் எத்தனை வியூகங்களில் சிக்கியிருக்கிறான் என்று பார்த்தேன். அர்ஜுனனுக்கு மகனாகவும் கிருஷ்ணனுக்கு மருமகனாகவும் பிறந்ததேகூட பெரிய பொறிதான். ஒவ்வொரு பொறியாக விளக்கியபடியே வந்து கடைசியில் அவன் மீளவே முடியாது என்று காட்டுகிறது வெண்முரசு. அந்த ஒவ்வொரு பொரியும் தாமரையின் ஓர் இதழ்

அர்விந்த்