Tuesday, September 3, 2019

பேரன்னை




அன்புள்ள ஜெ,

காந்தாரி ராணித்தேனீ மாதிரி இருக்கிறார்கள். அதை முன்னரே எவரோ இந்தக் கடிதப்பகுதியில் எழுதிவிட்டார்கள். எல்லா வரிகளும் இந்த உவமைக்கே உதாரணமாக உள்ளன.அவர்களின் மிகப்பெரிய உடல். கண்ணில்லாத தன்மை. எங்கேயும் போகாமல் அரண்மனையிலேயே வாழ்வது [ராணித்தேனீக்கு கண் இல்லை. பறக்கவும் முடியாது. அளவிலும் பெரியது] அவர்களிடமிருந்தே அத்தனை பிள்ளைகளும் பிறக்கின்றன. அவர் ஒரு மூதன்னை மட்டும்தான். அந்தக்குணச்சித்திரம் ஆரம்பம் முதல் அப்படியேதான் வந்துகொண்டிருக்கிறது. இது மகாபாரதத்தில் இருக்கும் காந்தாரி கதாபாத்திரத்திலிருந்து வேறுபட்டது. ஆனால் இந்தியாவிலுள்ள பல ஃபோக் மகாபாரதக் கதைகளில் இது உள்ளது. இந்த வடிவம்தான் இன்னமும் பொருத்தமானதாக உள்ளது

சாரதா