Tuesday, September 3, 2019

ருத்ரம்




ஒரு பேரன்னை அமர்ந்திருக்கிறாள். அவளுடைய பார்வைக்குமுன்னால் ஒவ்வொரு கருவாகக் கலைந்துகொண்டிருக்கிறது. அவருடைய குடியில் ஒரு கருகூட மிஞ்சுவதில்லை. கொடூரமான ஒரு முடிவு. நினைக்கவே அந்தக் காட்சி பெரிதாகிக்கொண்டிருக்கிறது. அந்த நாடகத்தருணம் மிகச்சுருக்கமாகவே முடிந்துவிட்டது. பலநினைவுகள் பலநிகழ்வுகள். ஆகவே இந்த கொடிய முடிச்சை வாசகர்கள் கொஞ்சம் பிந்தித்தான் புரிந்துகொள்ளமுடியும். காந்தாரியின் கண்முன் கௌரவக்குடி முழுமையாக அழிகிறது. போரில் அனைவரும் செத்துவிட்டார்கள். எஞ்சியிருப்பவர்கள் மைந்தர்களின் பெண்களின் வயிற்றிலிருக்கும் கருக்கள். அவையும் அழிகின்றன. மணலில் நுரை மறைவதுபோல என்று சொல்வார்கள். அதே போல. கொடுமையான ஒரு இடம். ஆனால் மிக மிக சுருக்கமாக, அமைதியாகச் சொல்லப்பட்டு முடிந்துவிட்டது மயான ருத்ரர்களின் கொடிய நடனம் அது

செந்தில்குமார்