Monday, September 2, 2019

கெடுமதி


அன்புள்ள ஜெ,

ஓடிப்போனவர்களைப்பற்றிய கடிதம் வாசித்தேன். அதை வாசிக்கும்வரை நான் அந்தக்கோணத்தில் யோசிக்கவே இல்லை. அந்தப்படைவீரர்களை வாசித்தபோது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் ஒரு கெடுமதி காட்டுகிறார்கள். ஆகவே ஓடிப்போகிறார்கள். அவர்கள் தங்களுக்குள் உள்ள கோழைத்தனத்தை அடையாளம் கண்டுகொண்டதுமே மேலும் கொடியவர்களாக ஆகிவிடுகிறார்கள். உடைகளை கழற்றுவதுபோல values அனைத்தையும் கழற்றிவீசிவிட்டு கொடிய அரக்கர்களாக ஆகிவிடுகிறார்கள். அஸ்தினபுரியின்மீதே படைகொண்டுசெல்கிறார்கள். ஆச்சரியமான ஒரு திருப்பம் இது. உண்மையில் இப்படித்தான் யதார்த்தம் இருக்கிறது. அவர்கள் அடிப்படையில் தங்கள்மேல் தங்களுக்கே மரியாதை இல்லாமலாகிவிட்டார்கள். ஆகவே அதன்பின் அவர்களுக்கு எதன்மேலும் மரியாதை இல்லை. இப்படி ஆனவர்கள் அஸ்தினபுரிக்கும் பெரிய சுமைகள். அவர்களின் பிள்ளைகள் அங்கே பிறக்கக்கூடாது. அதைத்தான் சத்யவதி என்ற மூதன்னை வந்து அழிக்கிறாள்

சரவணன்