Sunday, September 8, 2019

விலக்கம்


அன்புள்ள ஜெ

ராதை கர்ணனை தன்னுடைய கள்ளமின்மையால் விலக்கிவிடுகிறாள் என்று ஒருவரியை இக்கடிதங்களில் வாசித்தேன். கூர்மையான வரி. குந்தி தன் கள்ளத்தால் அவனை இழக்கிறாள் என்றவரியையும் கூடவே சேர்த்துக்கொள்லலாம் என நினைக்கிறேன்

ஆச்சரியம் என்னவென்றால் விருஷாலி தன்னுடைய பணிவால் கர்ணனை விலக்குகிறாள். கலிங்க அரசி தன்னுடைய நிமிர்வால் அவனை விலக்குகிறாள்

எப்படியானாலும் அவனுக்கு மிஞ்சுவது அந்த விலக்குதல்தான்

ராஜசேகர்