Friday, September 6, 2019

அம்பையும் முருகனும்



அன்புள்ள ஜெ

இங்கே அம்பை பற்றிய கடிதங்களைக் கண்டேன். அம்பை அஸ்தினபுரியின்மேல் கடுமையான கோபத்துடன் எரிந்தபடிச் சென்றாலும் அவளுக்குள் ஒரு சிறிய கனிவு பிறக்கிறது

உடலே சிதையாக ஆன்மா எரிய அம்பை அங்கிருந்த மலைமீதேறிச் சென்றாள். அங்கே சிறுகடம்பவனமொன்றுக்குள் கைவேலுடன் நின்றிருந்த குழந்தைமுருகனின் சிலையைக் கண்டதும் அவள் முகம் கனிந்தது. உடலெங்கும் நாணேறியிருந்த நரம்புகள் அவிழ்ந்தன. முழந்தாளிட்டு அந்த முருகனின் கரியசிலையை மார்போடணைத்துக்கொண்டதும் அவள் முலைகள் கனிந்து ஊறின.

இந்த கனிவினால்தான் அம்பையால் அஸ்தினபுரி காப்பாற்றப்படுகிறது. அதில் ஒரு உயிரின் துளி எஞ்சுகிறது. அது முருகனின் அருள். மீன்டும் அஸ்தினபுரி பிறந்து எழுவதற்கு முருகனின் அருள் உதவுவதாக வரும் என நினைக்கிறேன்

ராஜசேகர்