Monday, September 9, 2019

கவிஞன் 4




அன்புள்ள ஜெ

கவிஞன் பற்றிய கடிதங்களில் ஒரு வரி. நீடுவாழிகளால் இயங்குகிறது இவ்வுலகம். வியாசர் சிரஞ்சீவி. அவர் சொல்வழியாக அமரத்துவம் அடைந்தார். ஆனால் வஞ்சத்தால் அமரத்துவம் அடைந்தவன் அஸ்வத்தாமன். அவனும் இந்த புவியின் இயக்கத்திற்கு இன்றியமையாதவன்தானா? வெண்முரசு அப்படித்தான் சொல்கிறது என்ற எண்ணம் வந்தது

செல்வக்குமார்