Friday, September 6, 2019

பீஷ்மரின் ஆளுமை



அன்புள்ள ஜெ

முதற்கனல்முதல் ஒவ்வொரு கதாபாத்திரமாகத் தொட்டு அவற்றின் வளர்ச்சியை மனதில் மேப் போட்டு பார்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இது என்று தோன்றுகிறது. முதலில் என் மனதில் வருபவர் பீஷ்மர்தான். ஆரம்பத்தில் அவரை தேவவிரதன் என்றுதான் நினைத்தேன். ஆனால் துறந்தவர்கள் இனித்துக்கொண்டே செல்லவேண்டும் என்று குன்றக்குடி அடிகளார் ஒரு உரையிலே சொல்கிறார். ஆனால் பீஷ்மர் கசந்துகொண்டே செல்கிறார்/ அதற்கான காரணம் என்ன என்று வெவ்வேறு பார்வைகள் வந்துகொண்டே இருந்தாலும் கடைசியில் தெரிகிறது, அவர் துறந்தவை எச்சமில்லாமல் துறக்கப்படவில்லை என்பது. குருக்ஷேத்திரத்தில் அவர் பீமனிடம் பேசும் இடமே உதாரணம். அதிலிருந்து வரும் தெளிவுடன் பழைய நிகழ்ச்சிகளை வாசிக்கையில் முற்றிலும் புதிய கோணம் திறக்கிறது. பல மர்மங்கள் தெளிவடைகின்றன

ஆனந்த்