Wednesday, September 4, 2019

பெருந்தந்தை-5




அன்புள்ள ஜெ,

வெண்முரசிலுள்ள துரியோதனனின் கதாபாத்திரத்திற்கும் கம்பராமாயணத்திலுள்ள ராவணனின் கதாபாத்திரத்திற்கும் இடையே ஒற்றுமை இருப்பதை நானும் கவனித்தேன். ஆச்சரியமான பல விஷயங்கள். குறிப்பாகத் தம்பியருடனான உறவைச் சொல்லலாம். மகாபாரத மூலத்தில் அப்படியொரு உறவு சொல்லப்படவில்லை. ராமாயண மூலத்திலும் கிடையாது. ஒரு பெருந்தந்தையாக அவனை ஆக்குவது நூறு தம்பிக்கு அண்ணன் என்பதுதான். அவன் போருக்குச் செல்வது நூறு கைகளுடன்தான். அவனை கடைசியில் தனிமையாக சாவதாக காட்டியிருப்பீர்கள். அதுவும் ராவணன் செத்ததுடன் இணைந்துபோகிறது. இந்த ஒற்றுமையைக்கொண்டுதான் நாம் வெண்முரசு முன்வைக்கும் துரியோதனனைப் புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன்

ஆர்.ஆறுமுகம்