Sunday, September 8, 2019

இரும்பு




அன்புள்ள ஜெ

வெண்முரசில் வரும் கவிதைமொழியை கதையோட்டம் காரணமாக நாம் பலசமயம் வாசிப்பதில்லை. ஆகவே அதை தனியாக வாசிக்கையில் ஒரு திகைப்பு உருவாகிறது. இந்நாவல் இது முடிவடைந்தபின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தான் வாசிக்கப்படும் என்று தோன்றுகிறது

தாரகனின் நெஞ்சின் குருதியை உண்டு தங்கம் குளிர்ந்தது. அவன் மூச்சின் குருதியை உண்டு வெள்ளி அணைந்தது. அவன் விழைவின் குருதியை உண்டு செம்பு அடங்கியது. ஆன்றோரே, அவன் வஞ்சத்தின் குருதியை உண்ணப்பெற்றது இரும்பு. அது அணையவேயில்லை.

இரும்பைப்பற்ரி இந்நாவல் சொல்லும் பல்வேறு கவிதைவரிகளுடன் இந்த வரியை இணைத்து பொருள்கொள்ளவேண்டும். அத்தகைய வாசிப்புக்கள் இனிமேல் வரலாம்

ஆனால் எந்நிலையிலும் முழுசாக வாசித்துமுடிக்கப்படாத நூலாகவே இது இருக்குமென நினைக்கிறேன்

செல்வக்குமார்