Tuesday, August 22, 2017

அர்ஜுனன் சொல்லும் உபதேசம்





அன்புள்ள ஜெ

போர்க்களத்தில் வென்று மீண்டபின் உத்தரனுக்கு அர்ஜுனன் சொல்லும் உபதேசம் மிகவும் முக்கியமானது. வியாபாரத்தில் இது மிகமுக்கியமானது. என் மாமா இதேபோல எனக்குச் சொன்னார். வியாபாரத்தில் ஆரம்பத்தில் நாம் ஒரு உற்சாகநிலையில் இருப்போம். எல்லாவறையும் கணக்குபோட்டு குறிவைத்து அடிப்போம். ஜெயித்தபின் நாம் ஜெயிக்கக்கூடியவர்கள் என்ற எண்ணம் வந்துவிடும். கவனம் குறைந்துவிடும். வியாபாரம் போர் அடிக்கக்கூடிய விஷயம் ஏனென்றால் ஒரே விஷயம் திரும்பத்திரும்ப நிகழ்வதுதான் அது. அப்படி அது போர் அடிக்கும்போதும் அதைச் செய்வது எப்படி என்பதுதான் பயிற்சி. ஒருவர் தனியாக முயற்சிசெய்யாமலேயே அவருடையக் கைப்பழக்கத்தால் ஜெயிப்பர் என்றால்தான் அது வியாபாரம். அர்ஜுனன் அதைத்தான் சொல்கிறான். பயிர்சி எவ்வளவு முக்கியம் என்று

சந்திரசேகர்