Wednesday, August 9, 2017

மண்ணாசை



அன்புள்ள ஜெ,

பாஞ்சாலி ஏற்கனவே துகிலுரியப்பட்டவள். அதுவே மீண்டும் சபையில் நடக்கிறது. மகாபாரத மூலத்தில் இதையும் பாண்டவர்கள், பீமன் உட்பட பார்த்துக்கொண்டு சும்மாதான் இருக்கிறார்கள். அங்கேயே கொதித்து எழவில்லை. ஏனென்றால் வேஷம் கலைந்துவிடும். அப்படியென்றால் அவர்களுக்கு நாடுதான் முக்கியம் நீங்கள் இதில் அவர்கள் உருமாறி இன்னொருவராக உண்மையிலேயே ஆகிவிட்டார்கள் என்றெல்லாம் முன்னாடியே சொல்லிச் சமாளித்துவிட்டீர்கள். எப்படிச் சமாளித்தாலும் அவர்களுக்கு மண்ணாசைதான் என்பது மாற்றமுடியாத உண்மை

எஸ்.ஆர்.பாபு