Wednesday, November 13, 2019

நீர்க்கடன் காட்சிகள்



அன்புள்ள ஜெ

நீர்க்கடன் காட்சிகள் நெஞ்சை பிசைகின்றன. ஊழை இத்தனை கோணங்களில் இத்தை நுட்பங்களில் வாசித்ததில்லை. ஊழ் என்பதும் விண்புகுதல் என்பதும் வெறும் சொற்கள் அல்ல என்று இந்த அத்தியாயம்தான் காட்டுகிறது. எத்தனை வகையான கேள்விகள். ஒவ்வொன்றுக்குமாக பதில்சொல்லிக்கொண்டே செல்கிறது வெண்முரசு.

ஆனால் அத்தனை சித்தரிப்புகளையும் விட சூட்சுமமனானது மனிதர்கள் சாவின்முன் அடையும் விதவிதமான நடிப்புகள்தான். நடிப்பதே தெரியாமல் நடிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஏமாற்றிக்கொள்கிறார்கள். தங்களையே தாங்கள் ஏமாற்றிக்கொள்கிறார்கள்.

மனிதர்களை நினைத்து பெரும் பரிதாபம்தான் ஏற்படுகிறது.

ஜெயராமன்