Wednesday, November 30, 2016

திரிசிரஸ்



ஜெ

கிராதம் நாவலில் இப்பகுதியில் வரும் திரிசிரஸ் என்னும் கதாபாத்திரத்தை என்னால் முழுமையாக உள்வாங்கவே முடியவில்லை. ஆனால் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன். விக்கியில் போய்ப்பார்த்தால் அது மிகமிகத் தொன்மையான உருவகம் என்று தெரிகிறது. சொல்லப்போனால் விஷ்ணு சிவன் எல்லாருக்கும் முந்தையது

அப்படி ஒரு உருவகம் எப்படி நம் மக்களுக்குத் தோன்றியது. இரு பறவைகளில் ஒன்று பழம் தின்கின்றது ஒன்று பார்த்திருக்கிறது என்பதைவிட நுட்பமானது இது. ஒன்று கள் குடிக்கிறது. ஒன்று வேத்மோதுகிறது. ஒன்று இரண்டையும் பார்த்துக்கொண்டிருக்கிறது

பலவகையிலும் தத்துவார்த்தமான உருவகம். இதை ஏன் இதுவரை இங்கே எவருமே பேசியதில்ல என ஆச்சரியமாக இருக்கிறது

சுந்தர்ராஜன்