Tuesday, November 15, 2016

மலப்பெருக்கு



அன்புள்ள ஜெ

வெண்முரசில் இப்பகுதி வேறு ஒரு லெவலில் இருக்கிறத் 28 நரகங்கள் வழியாக அவன் செல்லும் இடம். அதெல்லாம் யோகநிலை அல்லது ஆழ்மனசின் அடிநிலை என்றுதான் தோன்றுகிறது. அவன் செல்வது அவன் ஆழம். மனசுக்கு ஆழத்திலிருப்பது உடலின் ஆழம் என்பது ஒரு பெரிய அபத்தமான உண்மை

அவன் வைதரணியைக் கடக்கிறான். மலப்பெருக்கு. அதற்குப்பின்னால்தான் முடிவெடுக்கமுடியாத தராசுமுட்களால் ஆன நரகம் இருக்கிறது. ஒன்றையே எண்ணிப்போகும் அர்ஜுனன் கூட அங்கே விழுகிறான். அன்னையின் முலைதான் அவனைக் காப்பாற்றுகிறது.

இந்தப்பகுதியை யோகப்பயிற்சி உடையவர்கள் கொஞ்சம் கூடுதலாகப்புரிந்துகொள்ளமுடியும்


மனோகர்