Tuesday, November 29, 2016

தேவாசுரமோதல்கள்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் கிராதம் மிகச்சிக்கலான ஒரு கதைப்பகுதியில் இருக்கிறது. இந்தச்சிக்கல் எப்படி ஒரு ஊடுபாவுகொண்ட அமைப்பு உருவாகிவந்தது என்பதைக் காட்டுகிறது. இரண்டு வெவ்வேறுபன்பாடுகள் முரண்பட்டுக்கொண்டே இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றாக இணையவும் செய்தன என்பதைக்காட்டுகிறது. தேவாசுரமோதல்கள் வழியாக எப்படி வேதங்கள் உருவாகிவந்தன, எப்படி அசுரன் தேவன் ஆகமாறினான் என்பதைக் காணமுடிகிறது. 

இதில் வெவ்வேறு கதைகள். எல்லாக்க்கதைகளும் ஒன்றுடனொன்று கலந்து கிடக்கின்றன. இந்தக்கதைகளை நூலிழை பிரிக்க முயன்றாலே வேதம் எப்படி உருவானது, எவருடையவேதம் என்பதைக்கண்டுகொள்ளமுடியும் என்று தோன்றுகிறது. இங்கே அசுரவேதம் எப்படி உருவானது என்பதைப்புரிந்துகொண்டால் பின்னாளில் கிருஷ்ணன் எப்படி வந்தான் என்பதைப்புரிந்துகொள்ளலாம்

ஜெயராமன்