Sunday, November 20, 2016

பிங்கலம்



ஜெ

அர்ஜுனன் பிங்கலம் என்னும் மலைக்கிராமத்தில் மழையை எதிர்கொள்ளும் இடம் அற்புதமானது. வருணதரிசனம் அது. அந்த மக்கள் அந்த அருளில் திளைக்கும் காட்சியும் மழை சுழன்று அடித்து வந்ததுபோலவே மறைவதும் அழகிய சித்திரங்கள். எங்கே இதைப்பார்த்தீர்க்ள் என அறிய ஆவல்.

அந்நிலம் பிங்கலம் என அழைக்கப்படுவதும் நியாயமே. கிருஷ்ணன் அனுப்பிய படங்களைப்பார்த்ததும் அதை நினைத்தேன். அந்த வண்ணம்தான் பிங்கலம்

மகேஷ்

அன்புள்ள மகேஷ்

அதே நிலம் காஷ்மீரின் வடக்குச்சரிவில் பூஞ்ச் பகுதியில் ஆரம்பிக்கிறது. அந்த மழைமறைவுநிலத்தில் ஒரு மழையை நான் கண்டிருக்கிறேன்
ஜெ