Sunday, November 13, 2016

முலை



அன்புள்ள ஜெ

கடைசியாக யமனை எப்படி அர்ஜுனன் ஜெயிப்பான் என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அர்ஜுனன் அன்னையின் முலையை ஆயுதமாக ஆக்கிக்கொண்டு யமனை ஜெயிக்கிறான்.

மரணம் பெரியது. ஜெயிக்கமுடியாதது. ஆனால் அதையும் ஜெயிப்பது பிறப்பு. அதனால்தான் இங்கே நாம் இன்னும் இருந்துகொண்டிருக்கிறோம். முலைப்பாலின் முன்னால் சாவு தோற்றாகவேண்டும்

அந்த குறிப்பு முன்னர் அந்த அன்னை குழந்தை சாவதைப்பற்றிப் பேசும்போது நான் பெற்றுக்கொண்டே இருப்பேன், தோற்கவே மாட்டேன் என்று சொல்லும் இடத்திலேயே வந்துவிட்டது


சிவா