Saturday, November 12, 2016

மனப்பதற்றங்கள்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் நரகச்சித்தரிப்பை ஒரு முறைதான் வாசித்தேன். ஆனால் இனிமேல் அதை மறக்கவே முடியாது என்னும் வகையில் அது ஆழமகாப்பதிந்தது. கருடபுராணத்தில் உள்ள தண்டனைதான் இதெல்லாம். ஆனால் அதை மனநோயின்  பக்கத்தில்கொண்டு சென்றதும். ஆழ்மனமாக ஆக்கியதும்தான் தங்கள் படைப்பு. இன்னது செய்தவர்களுக்கு இன்னதுதான் தண்டனை என்றுதான் இருக்கும். ஆனால் எல்லாமே ஒருவகை மனப்பதற்றங்கள்தான் என்று காட்டிவிட்டது இந்தப் பகுதி

எனக்கு கொஞ்சம் காய்ச்சல்வந்தாலும் கனவில் புழுக்கள் வரும். அஜீர்ணம் வந்தால் வாய்க்குள் மணலைத் திணித்ததுபோல வரும். அந்தப் பயங்கள் அனைத்தையும் திரட்டி நரகத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என நினைக்கிறேன்

சிவக்குமார்